Monday, December 20, 2010

செசன்யா --- என்ன தான் பிரச்சனை?





அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...


செசன்யா (Chechnya), ரஷ்யாவுடன் நீண்ட நாட்களாக விடுதலைக்காக போராடிவரும் பகுதி....
செசன்யா....இப்போது என்ன தான் வேண்டும் இந்த பகுதி மக்களுக்கு? 

நான்கே வார்த்தைகளில் சொல்லுவதென்றால்...

"நிரந்தர அமைதி மற்றும் பாதுகாப்பு"

இதுதான் இப்போது செசன்யா மக்களுக்கு தேவை. பார்ப்பதற்கு எளிமையாய் தோன்றும் இந்த நான்கு வார்த்தைகளில் தான் விஷயமே இருக்கிறது. 

பெரும்பாலான செசன்ய மக்களை பொறுத்தவரை இந்த நிரந்தர அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது செசன்யா சுதந்திர நாடாவதால் மட்டுமே சாத்தியம். 

ரஷ்ய கூட்டரசின் (அல்லது சம்மேளனத்தின்  (Russian Federation) ) முடிவோ, அவர்களது மண்ணில் இருந்து ஒரு பகுதி பிரிவதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது என்பது....

இங்குதான் விவகாரமே, ரஷ்ய கூட்டரசு என்னதான் செசன்யா தங்களது பகுதி என்று சொன்னாலும், செசன்ய மக்களை பொறுத்தவரை அவர்கள் என்றுமே தங்களை ரஷ்யாவின் ஒரு பகுதியாக நினைத்ததில்லை/விரும்பியதில்லை, மேலும் செசன்யா ரஷ்யாவின் நிலப்பகுதியும் இல்லை. செசன்னியர்களை பொறுத்தவரை, ரஷ்யா தன் ராணுவ பலத்தால் அவர்களை தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கிறது, அவ்வளவுதான். இன்னும் சொல்லப் போனால் 1990 ஆம் ஆண்டு, தாங்கள் ஒரு சுதந்திர நாடு என்று அறிவித்து கொண்டவர்கள் அவர்கள். பிறகு ரஷ்ய கூட்டரசிற்கும் செசன்யாவிற்கும் இடையே இரு யுத்தங்கள், இவற்றின் மூலம் மறுபடியும் செசன்யா, ரஷ்ய கூட்டரசின் கீழ்.           
செசன்ய பிரச்சனை இன்று நேற்று வந்ததல்ல, அது சுமார் முன்னூறு ஆண்டுகால பிரச்சனை. என்று ரஷ்யாவின் ஜார் (Czar) ஆட்சியாளர்களின் படைகள் செசன்னியர்களின் நிலங்களை ஆக்கிரமைக்க துவங்கினவோ (late 18th century) அன்று ஆரம்பித்த பிரச்சனை. இன்று வரை பல ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள், ஆனால் செசன்னியர்களுக்கு அவர்கள் நிலப்பகுதி மட்டும் திரும்ப கிடைக்கவில்லை. அன்றிலிருந்து இன்று வரை லட்சக்கணக்கான மக்களை இந்த விடுதலை போராட்டத்திற்கு அவர்கள் பறிகொடுத்து விட்டனர்.

செசன்ய விவகாரங்களை முழுமையாக இங்கு பார்க்க முடியாது என்றாலும், முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்... 
அதற்கு முன், இன்றைய ரஷ்யாவைப் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வது இந்த பதிவிற்கு அவசியம் என்று நினைக்கிறேன்.            

முதலில், ரஷ்யா என்று அழைப்பதை விட ரஷ்ய கூட்டரசு அல்லது சம்மேளனம் (Russian Federation) என்று அழைப்பதே அரசியல் ரீதியாக சரியாக இருக்கும். எழுதுவதற்கு எளிமையாக இருக்கும் என்பதற்காக இந்த பதிவு முழுவதும் ரஷ்யா என்றே பயன்படுத்த படுகிறது. 

ரஷ்யா என்பது மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு, ஐரோப்பாவின் கிழக்கிலிருந்து ஆசியாவின் கிழக்கு வரை பரந்து விரிந்த பகுதி. ரஷ்யாவின் அரசியலமைப்பு (அல்லது அரசியல் சாசனத்தின் (Constitution)) படி, ரஷ்யா, 83 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது (83 federal Subjects or members of Federation). இதுவே முன்பு 89 ஆக இருந்தது,  பின்னர் சில பகுதிகளை ஒன்று சேர்த்து 83 ஆனது. நம் நாட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்   இருக்கிறதல்லவா, அதுபோல.. 
அவற்றில் குடியரசுகள் (Republics) மட்டும் 21. ரஷ்ய சம்மேளனம் உருவான போது, ரஷ்யாவில் இருந்த வெவ்வேறு இனத்தவருக்கு (உதாரணத்திற்கு செசன்னியர்கள்)   அவர்கள் சார்ந்த இனம், மொழி வாரியாக குடியரசுகள் உருவாக்கப்பட்டன. மொழி வாரியாக நம் மாநிலங்கள் பிரிக்கப்பட்டனவே அது போன்று.  

இந்த குடியரசுகள் சுதந்திர நாடுகள் கிடையாது. இவை ரஷ்யாவின் கட்டுபாட்டுக்குள்லேயே  இருக்கும், ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே அறியப்படும், ஆனால் கூட்டரசின் மற்ற பகுதிகளை விட இவற்றுக்கு அதிகாரம் அதிகம். 

  • இந்த குடியரசுகளுக்கு தன்னாட்சி அதிகாரம் உண்டு (Autonomous)
  • ஒவ்வொரு குடியரசும் தங்களுடைய அரசியல் சாசனத்தை (Constitution) உருவாக்கி கொள்ளலாம். 
  • பாராளுமன்றம், அதிபர் என்று ஒரு நாட்டிற்கு இருக்கக்கூடிய எல்லாம் உண்டு.

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்களுடைய உள்விவகாரங்களை (Internal Affairs) எல்லாம் இவர்களே பார்த்துக்கொள்ளலாம், ஆனால் வெளியுறவு மற்றும் ராணுவ அதிகாரங்கள் (External Affairs and Military) எல்லாம் ரஷ்யாவிடம் இருக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த குடியரசுகளின் அதிபரை, ரஷ்ய அதிபர் தான் தேர்ந்தெடுப்பார்.
   
"Federation means The act of constituting a political unity out of a number of separate states or colonies or provinces so that each member retains the management of its internal affairs" 

என்னதான் தன்னாட்சி அதிகாரம் இருப்பதாக சொல்லப்பட்டாலும் நடைமுறையில் நிச்சயமாக அது இல்லை. புடின் அவர்கள் ரஷ்யாவின் தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு குடியரசுகளின் அதிகாரங்களை பெருமளவு குறைத்து விட்டார்.  

இங்கு ஒன்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். சோவியத் யூனியனில் (USSR) இருந்து பிரிந்து சென்ற 14 நாடுகளும் (1991), சோவியத் யூனியனின் குடியரசுகளாக இருந்தவைதான். இதுதான் இன்றைய ரஷ்யாவின் மற்றுமொரு அச்சம். தற்போது ரஷ்ய கூட்டரசின் பகுதிகளாக உள்ள குடியரசுகளும் சுதந்திரம் கேட்க ஆரம்பித்து விட்டால் ரஷ்யாவின் நிலை? கேட்க ஆரம்பித்துவிட்டாலா, ஏற்கனவே சுதந்திர கோஷம் துவங்கிவிட்டது. செசன்யாவில் தான் இது மிக அதிகம் என்றாலும் மற்ற சில குடியரசுகளிலும் (குறிப்பாக செசன்யாவை சுற்றியுள்ள குடியரசுகளான இங்குஷேடியா (Ingushetia) மற்றும் டகெஸ்டான் (Dagestan)) ஆங்காங்கே கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

ரஷ்யாவின் நிலையிலிருந்து பார்த்தோமானால் அவர்களாலும் இந்த சில குடியரசுகளுக்கு தற்போதைய நிலையில் சுதந்திரம் கொடுக்க முடியாது. ஏனென்றால், சோவியத் யூனியன் கலைந்த பிறகு பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்து விட்டது. பசி, பஞ்சம் என்று பிரச்சனைகள் தலை விரித்தாடியது. இன்று ரஷ்யா மெல்ல மெல்ல மீண்டு வருகிறது, அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று,  செசன்யா மற்றும் அதனை சுற்றியுள்ள குடியரசுகளின் இயற்கை வளங்கள் (முக்கியமாக எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள்).



  • Chechnya has important oil deposits, natural gas, limestone, gypsum, sulphur and other minerals; 
  • Ingushetia is rich in marble, timber, dolomite, plaster, limestone, gravel, granite, clay, thermal medical water, rare metals, minerals, oil and natural gas reserves 


அதுமட்டுமல்லாமல் இந்த குடியரசுகளின் பக்கத்தில் உள்ள காஸ்பியன் கடலில் (Caspian Sea) சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளம். இந்த எண்ணெயை மேற்கே உள்ள நாடுகளுக்கு கொண்டுச்செல்ல, செசன்யா மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியரசுகளின் வழியாக பைப்லைன் (குழாய்கள்) போடுவதுதான் சிறந்த வழி என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.                  

ஆக, ரஷ்யா, இந்த குடியரசுகளுக்கோ அல்லது இதில் ஏதோ ஒரு குடியரசுக்கோ சுதந்திரம் வழங்கிவிட்டால், வளர்ந்து வரும் தன் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று நினைக்கிறது. 

இந்த ஒரு முக்கிய காரணம் தான் செசன்யாவிற்கு சுதந்திரம் அளிப்பதை தடுக்கிறது. என்ன விலை கொடுத்தாவது செசன்யாவை தன்னிடத்தில் வைத்திருக்கவே ரஷ்யா விரும்புகிறது.

இங்கே சற்று நிறுத்தி செசன்யாவின் வரலாற்றை பார்த்து விடுவோம். நாம் மேல பார்த்த தகவல்களில் உங்களுக்கு சிறு சிறு குழப்பங்கள் இருந்தால், செசன்ய வரலாற்றை பார்ப்பதன் மூலம் அவை நிவர்த்தி அடையலாம். இன்ஷா அல்லாஹ்... 

செசன்யாவின் வரலாற்றை பார்க்கும்பொழுது அது பூகோள ரீதியாக அமைந்திருக்க கூடிய பகுதியையும் பார்த்து விட வேண்டும். செசன்யா, ஐரோப்பிய கண்டத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.



செசன்யா அமைந்திருக்க கூடிய நிலப்பகுதி காகசஸ் (Caucasus Region) என்று அழைக்கப்படுகிறது, இந்த காகசஸ் பகுதியின் வடக்கில் தான் செசன்யா (Chechnya situated in North Caucasus region) இருக்கிறது. அதன் பக்கத்தில் ரஷ்ய சம்மேளனத்தின் மற்ற குடியரசுகளும் (Republics), நிலப்பகுதிகளும் (Territory) இருக்கின்றன.



தென் காகசஸ் (South Caucasus) பகுதியில் ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளான ஜார்ஜியா (Georgia), அர்மேனியா (Armenia) மற்றும் அசர்பைஜன் (Azerbaijan) போன்ற நாடுகள் இருக்கின்றன.

இந்த பகுதிக்கு காகசஸ் என்று பெயர் வரக்காரணம் இங்குள்ள காகசஸ் மலை தொடர்களால் (Caucasas Mountains) தான். இந்த காகசஸ் மலைத்தொடர், கிழக்கே காஸ்பியன் கடலில் (Caspian sea) இருந்து மேற்கே கருங்கடல் (Black Sea) வரை நீண்டுள்ளது.



ஆக, காகசஸ் பகுதியின் வடக்கே செசன்யா உள்ளிட்ட ரஷ்யாவின் பகுதிகளும், தெற்கே ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளும் இருக்கின்றன.

இங்கு, இந்த வட காகசஸ் பகுதியில் உள்ள மற்ற இரு முக்கிய ரஷ்ய குடியரசுகள் இங்குஷேடியா (Ingushetia) மற்றும் டகெஸ்டான் (Dagestan) ஆகும். ஏன் இவற்றிற்கு முக்கியத்துவம்? ஏனென்றால் இந்த பகுதிகள் இல்லாமல் செசன்யாவின்  வரலாற்றை பார்க்கமுடியாது. 

இப்போது செசன்யாவின் வரலாற்றை பார்ப்போம்.                     

ரஷ்யர்களுடனான செசன்யர்களின் மோதல் என்பது ஆரம்பித்தது 1785 - 1791ல். அப்போது ரஷ்யா தன் நிலப்பகுதிகளை விரிவு படுத்த ஆரம்பிக்க, அதன் ஒரு பகுதியாக காகசஸ்சை ஆக்கிரமைக்க தொடங்கியது. ஆனால் ஆக்கிரமிப்பு என்பது சுலபத்தில் முடிந்துவிடவில்லை. ரஷ்ய படைகள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி வந்தது. ஏனென்றால் அந்த பகுதியில் இருந்த மக்களின் போர்த்திறமை அப்படி. கொரில்லா யுத்த முறைகளுக்கு பேர் போனவர்கள் அவர்கள். இன்று வரை மலைப்பகுதியில் செசன்யர்களை தோற்கடிப்பது என்பது ரஷ்ய படைகளுக்கு முடியாத காரியமாகவே இருக்கிறது.

அப்போது ரஷ்யர்களை எதிர்க்க படைகளை திரட்டி போராடியதில் முக்கிய பங்கு ஷேக் மன்சூர் (Sheikh Mansur Ushurma) அவர்களுக்கு உண்டு. ரஷ்ய படையினருக்கு சரியான சவாலாக விளங்கின இவரது படைகள்.

பிறகு 1834 முதல் 1859 வரை, ஷேக் மன்சூர் விட்டுச்சென்ற பணியை இமாம் ஷமீல் (Imam Shameel) தொடர்ந்தார். கடுமையான யுத்தத்திற்கு பிறகு 1859 ல், ரஷ்ய படை காகசஸ் பகுதியை முழுமையாக ஆக்கிரமைத்தது. ரஷ்ய ஆட்சி தொடங்கியது.       

ஆக, இவர்களுடைய நிலப்பகுதிகளை முதலில் ஆக்கிரமைத்தது ரஷ்யர்கள்தான். 

அன்று போராட ஆரம்பித்தவர்கள் தான் இன்றளவும் தங்கள் நிலத்தை மீட்க போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  

பிறகு, 1917 ஆம் ஆண்டு, ரஷ்ய புரட்சிக்கு பிறகு தங்களை சுதந்திர நாடாக பிரகடன படுத்திக்கொண்டார்கள் செசன்னியர்கள். ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ரஷ்ய படைகள் மறுபடியும் (இந்த முறை கம்யுனிச படைகள்) ஆக்கிரமித்து, 1923 இல் செசன்யாவையும் இங்குஷேடியாவையும் சேர்த்து செசன்ய-இங்குஷேடிய தன்னாட்சி பகுதி (Chechen-Ingush Autonomous Region) உருவாக்கப்பட்டது. பிறகு இதுவே 1930 இல், செசன்ய-இங்குஷேடிய தன்னாட்சி குடியரசு (Chechen-Ingush Autonomous Republic) என்று மாறியது.     

1944 ஆம் ஆண்டு, தங்கள் விடுதலைக்காக, ஹிட்லரின் நாஜி படைகளுக்கு செசன்யர்கள் உதவுவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். அதற்கு தண்டனை என்று, செசன்ய மக்களை கஜகஸ்தானுக்கும், சைபீரியாவிற்கும் நாடு கடத்த உத்தரவிட்டார்.

ஸ்டாலினின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால், ஹிட்லரின் நாஜி படைகள் செசன்யாவின் எல்லை வரைக்கூட வரவில்லை. அப்படி அவர்கள் வந்திருந்தால், இரண்டாம் உலகப்போர் சீக்கிரத்தில் முடிந்திருக்காது. ஏனென்றால் ஹிட்லரின் நாஜி படைகள் தோல்வியை தழுவியதற்கு மிக முக்கிய காரணம், அவரது துருப்புகளுக்கு தேவையான எண்ணெய் கிடைக்காததே. ஒருவேளை ஹிட்லரின் படைகள் செசன்யாவிற்குள் வந்திருக்குமானால் அவர்களுக்கு தேவையான எண்ணெய் வளத்தை பெற்றிருப்பார்கள், போரும் விரைவில் முடிவுக்கு வந்திருக்காது.

ஆக, ஸ்டாலினின் குற்றச்சாட்டில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை இறைவன் மட்டுமே அறிவான். சுமார் 4-8 லட்சம் மக்கள் நாடுகடத்த பட்டனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர், மிக மோசமான வானிலை காரணமாக போகும் வழியிலேயே உயிரிழந்தனர்.

செசன்ய-இங்குஷேடிய குடியரசு கலைக்கப்பட்டது, ரஷ்ய வரைபடத்திலிருந்தும் நீட்கப்பட்டது. இந்த சம்பவம் இன்றளவும் செசன்ய மக்களின் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது. ஸ்டாலினுக்கு பிறகு, 1957 ஆண்டு, குருஷேவ் (Khushchev) ஆட்சிகாலத்தில் நாடு கடத்தப்பட்ட செசன்னியர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். மறுபடியும் செசன்ய-இங்குஷேடிய குடியரசு நிறுவப்பட்டது.  

பிறகு 30 ஆண்டுகள் அமைதி. 1989 இல், பெர்லின் சுவர் இடிக்கப்பட, சோவியத் ரஷ்யா வீழ்ச்சியடைய துவங்கிய நேரம். நவம்பர் 1990 இல், செசன்யா தன் விடுதலையை அறிவித்தது. அதாவது சோவியத் யூனியனின் அரசியல் சாசன விதி 72 இன் படி (Soviet Constitution Article 72), விடுதலை கோரக்கூடிய குடியரசுகளுக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும். அதுபடி தங்களை சுதந்திர நாடாக அறிவித்துகொண்டார்கள்.     

Dec 31,1991 இல் சோவியத் யூனியன் முற்றிலுமாக வீழ்ச்சியடைய, சோவியத் யூனியனின்  14 குடியரசுகள் தங்கள் விடுதலையை அறிவித்தன. பிறகு ரஷ்ய சம்மேளனம் உருவாக்கப்பட்டது. Mar 31, 1992 இல் தற்போதைய ரஷ்யாவின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டது. அதிபராக போரிஸ் எல்சின் (Boris Yeltsin) பொறுப்பேற்றார். இங்குஷேடியா, ரஷ்யாவின் ஒரு குடியரசாக சேர, செசன்யா தன் சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தியது. ஜெனரல் ஜோகர் டுடதேவ் (General Dzhokhar Dudayev) சுதந்திர செசன்யாவின் அதிபராக பொறுப்பேற்று கொண்டார்.

எல்சின், செசன்யாவின் சுதந்திரத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டார்.

சோவியத் யூனியனின் மற்ற குடியரசுகள் சுதந்திர தேசங்களாக மாற, தங்களை ஏன் ரஷ்யா அங்கீகரிக்க மறுக்க வேண்டும் என்பது செசன்யாவின் கேள்வி. அதற்கு எல்சின், சோவியத் யூனியனின் மற்ற குடியரசுகளை போல அல்ல செசன்யா என்று சொல்லிவிட்டார்.

ஆனால் உண்மையான காரணமோ செசன்யாவின் இயற்கை வளங்களை ரஷ்யா இழக்க விரும்பவில்லை என்பதே ஆகும். பொருளாதார ரீதியாக துவண்டு கிடக்கும் ரஷ்யாவை செசன்யாவின் எண்ணெய் மற்றும் கனிம வளங்கள் காப்பாற்றும் என்ற நம்பிக்கைதான் அது.

அது பற்றியெல்லாம் செசன்யாவின் புது அரசாங்கம் கவலைப்படவில்லை. தாங்கள் இப்போது சுதந்திர தேசம் என்று பெருமைப்பட்டு கொண்டார்கள். எல்சினோ  மறுபடியும் செசன்யாவை பிடிக்க படைகளை அனுப்ப, செசன்யர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது ரஷ்யப்  படை.

மறுபடியும் 1994 இல், எல்சின் தன் படைகளை அனுப்பினார். பெரும் யுத்தம். இது வரலாற்றில் முதல் செசன்ய யுத்தம் (1994-1996) என்றழைக்கப்படுகிறது. இந்த யுத்தம் தான் செசன்னியர்களின் போர்த்திறனை உலகிற்கு அடையாளம் காட்டியது. ரஷ்ய படைகள் மிரண்டுபோயின. நாம் மேல பார்த்தபடி செசன்னியர்களை காகசஸ் மலைப்பகுத்தில் சந்திப்பதென்பது இன்று வரை ரஷ்ய படைகளால் முடியாத காரியம், ஆனால் நிலப்பகுதியிலும் அவர்கள் வல்லவர்கள் என்பதை நிரூபித்தது இந்த முதல் செசன்ய போர்தான்.

அதுமட்டுமல்லாமல், செசன்னியர்கள் சகோதரத்துவத்திற்கு பேர் போனவர்கள், அவர்களின் ஒற்றுமையை பறைச்சாற்றியதும் இந்த போர்தான். ஆக, முதல் செசன்ய யுத்தத்தில் ரஷ்ய படைகளுக்கு அதிர்ச்சி தோல்வி. இந்த போரில் செசன்ய அதிபர் டுடதேவ் 1995 இல் ரஷ்ய படைகளால் கொல்லப்பட்டாலும், அஸ்லன் மாஸ்கடோவ் (Aslan Maskhadov) தலைமை தாங்கி நடத்தினார்.

1996 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. சுமார் 40,000-80,000 பேர் பலியான கொடுமையான யுத்தம். செசன்ய நகரங்கள் முற்றிலும் சேதமடைந்தன. மக்கள் வீடுகளை இழந்தார்கள்.




ரஷ்ய அதிபர் எல்சினுக்கும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செசன்ய அதிபர் மாஸ்கடோவ்விற்கும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐந்து ஆண்டுகள் அமைதி காக்க வேண்டும் என்றும், பின்பு செசன்ய விடுதலை பரிசீலிக்கப்படும் என்பதும், இந்த ஐந்து ஆண்டு காலங்களில், ரஷ்யா, முற்றிலும் சேதமடைந்த செசன்ய நகரங்களை சீரமைக்க உதவும் என்பதும் ஒப்பந்தத்தின் முக்கிய சாரம்சங்கள்.

1999 இல், அதிபர் அஸ்லன், செசன்யாவில் இஸ்லாமிய ஷரியத் படி அரசாங்கம், அடுத்த மூன்றாண்டுகளுக்கு செயல் படும் என்று அறிவித்தார்.

ஆனால் பிரச்சனை முடியவில்லை, 1999 ஆண்டு, ரஷ்யா மறுபடியும் பெரும் படைகளை செசன்யாவிற்கு அனுப்பியது. இரண்டாவது செசன்ய யுத்தம் ஆரம்பம். படைகளை அனுப்பியதற்கு ரஷ்யா சொன்ன முக்கிய காரணங்கள் இரண்டு.

1. முதல் காரணம், பக்கத்தில் உள்ள டகெஸ்டானில் (Dagestan) உள்ள பிரிவினைவாதிகளுக்கு செசன்ய அரசாங்கம் உதவி புரிவதாக குற்றஞ்சாட்டியது, இதை செசன்ய அரசு மறுத்தது.

ஆனால் செசன்யாவில் இருந்து சில செசன்னியர்கள் டகெஸ்டானிற்கு சென்று அங்கு போராடி வந்தவர்களுக்கு உதவி செய்தனர் என்பது உண்மை.

ஆனால் இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். வட காகசஸ் பகுதியில் உள்ள செசன்யா,  இங்குஷேடியா (Ingushetia) மற்றும் டகெஸ்டான் (Dagestan) ஆகிய மூன்று பகுதிகளை சேர்ந்த மக்கள் காலங்காலமாக ஒன்றாக இருந்தவர்கள், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டவர்கள்/கொள்பவர்கள். நாம் முன்னே பார்த்த இமாம் ஷமில், டகெஸ்டானை சேர்ந்தவர் தான்.   

ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டு பொருத்தமில்லாதது. ஏனென்றால், 1999 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி, செசன்யாவின் எல்லையை ஒட்டிய, டகெஸ்டானில் இருந்த இரண்டு கிராமங்களை, போராட்டகாரர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி, குண்டு வைத்து தகர்த்தது ரஷ்யா. அதில் பல மக்கள் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தான், டகெஸ்டானில் உள்ள போராட்டகாரர்களுக்கு உதவி செய்யப்போனோம் என்பது அங்கு சென்ற செசன்னியர்களின் வாதம். அவர்கள் காலங்காலமாக இப்படி ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டுதான் இருக்கின்றனர். இது ரஷ்யாவிற்கும் தெரியாததல்ல.     

ஆனால், இதில் அரசாங்கத்திற்கு பங்கில்லை என்பது செசன்ய அரசின் வாதம். 

2. இரண்டாவது காரணம், அந்த ஆண்டு மாஸ்கோவில் நடந்த அடுக்குமாடி குடியிருப்பு குண்டுவெடிப்புகளுக்கு செசன்னியர்கள் தான் காரணம் என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியது.

1994-1996 ஆண்டுகளில் நடந்த முதல் செசன்ய போரின்போதே அப்படிப்பட்ட எதையும் செய்யாதவர்கள் அவர்கள். இப்போது அமைதி காலத்தில் செய்ய வேண்டிய அவசியம் என்ன? செசன்னியர்கள் இதை முற்றிலுமாக மறுத்தார்கள். இது ரஷ்ய உளவுத்துறையின் செயல் என்று குற்றஞ்சாட்டினர். ரஷ்யாவும் செசன்னியர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை.     

அதுமட்டுமல்லாமல், Economist அக்டோபர் 1999 இதழில், ரஷ்ய உளவாளிகள் ஒரு கட்டிடத்தில் குண்டு வைத்த போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டதாக செய்தி வெளியானது.

ஆக, ரஷ்யா 1999 ஆண்டு செசன்யாவின் மீது போர்த்தொடுக்க முக்கிய காரணங்கள் இதுதான்.
  
ஆனால் விளக்கங்களை ஏற்க மறுத்த ரஷ்ய அரசு, இந்த முறை மாபெரும் படையை அனுப்பியது. மறுபடியும் மோசமான யுத்தம், செசன்ய படைகள் மலைப்பகுதிகளுக்கு துரத்தப்பட, செசன்ய நகரங்கள் அழிக்கப்பட்டன. நிறைய மக்கள் கொல்லப்பட, மூன்றில் ஒரு பங்கு மக்கள் அகதிகளாக வெளியேறினர். ஐ.நா சபை செசன்யாவில் மனித உரிமை மீறல்கள் பெருமளவில் நடப்பதாக 2000 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மீது குற்றஞ்சாட்டியது.                                           



அப்போது விளாடிமிர் புடின் (Vladimir Putin) ரஷ்யாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருந்தார். புடினுடைய செசன்ய கொள்கைகளும் அவருக்கு முன் சென்றவர்களின் கொள்கையைப் போன்றே இருக்க, செசன்ய விடுதலை என்பது கேள்விக்குறியானது.

2002 ஆம் ஆண்டு, செசன்யர்கள் சிலர், மாஸ்கோவில் உள்ள ஒரு தியேட்டரில் புகுந்து சுமார் 763 பேரை பணயக் கைதிகளாக பிடித்தனர். செசன்யாவில் போரை நிறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்க, ரஷ்ய அரசாங்கம் அதனை ஏற்க மறுத்தது. பிறகு ரஷ்ய ராணுவம் விஷப்புகையை தியேட்டருக்குள் செலுத்தி அவர்களை கொன்றது. இதில் மக்கள் சுமார் நூறு பேரும் கொல்லப்பட்டனர்.    

2003 ஆம் ஆண்டு செசன்ய குடியரசுக்கான புதிய அரசியலமைப்பு கொள்கைகள் ரஷ்யாவினால் அறிவிக்கப்பட்டன. இதற்கு செசன்ய மக்களின் ஆதரவு இல்லை. பிறகு,   ரஷ்யாவின் பல பகுதிகளில் 2003-2004 ஆண்டு வாக்கில் பல குண்டுவெடிப்புகள் நிகழ்த்த பட்டன. அவை ரஷ்யாவை நிலை குலையச்செய்தன.

அவற்றில் மிக முக்கியமானது மற்றும் சோகமானது, செப்டம்பர் 1-3 தேதிகளில், 2004 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம். இந்த காலகட்டத்தில், சுமார் 32 கொரில்லாக்கள் (செசன்னியர்கள், இங்குஷேடியர்கள் மற்றும் ரஷ்யர்கள் இவர்களில் அடங்குவர்) செசன்யாவிற்கு பக்கத்தில் உள்ள பெஸ்லான் (Beslan) என்ற இடத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தனர் (on Sep 1st, 2004). பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று சுமார் 1100 பேரை பணயக்கைதிகளாக பிடித்தனர். இப்போதும் போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகளை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை.

மூன்றாம் நாள்  (on Sep 3rd, 2004) ரஷ்ய படைகள் பள்ளியை நோக்கி தாக்க ஆரம்பித்தன. பிறகு ரஷ்ய படைகளுக்கும், கொரில்லாகளுக்கும் நடந்த சண்டையில் சுமார் 335 பேர் கொல்லப்பட்டனர், அதில் 156 பள்ளிக் குழந்தைகளும் அடங்குவர். இது ஒரு மிக வேதனையான சம்பவம். ஏற்றுக்கொள்ள படக்கூடாததும் கூட...       

ஆனால் ரஷ்யா தன் முடிவில் உறுதியாய் நின்றது, தனக்கு ஆதரவான அரசாங்கத்தை செசன்யாவில் நிறுவியது. அன்றிலிருந்து இன்றுவரை ரஷ்யா அமைத்துள்ள பொம்மை அரசாங்கம் (Puppet Government) தான் செசன்யாவில் நடந்து வருகிறது.

2009 ஆம் ஆண்டு (April 2009) ரஷ்யா தன் படைகளை செசன்யாவிலிருந்து திரும்பப்பெற்றது.  போராட்டகாரர்களும் சென்ற ஆண்டிலிருந்து (August 2009) சண்டையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளனர்.       

ஆக, செசன்யாவின் பிரச்சனை என்பது, நாம் மேலே பார்த்த படி, ஜார் மன்னர்களாகட்டும், ரஷ்ய புரட்சியின் போது ஏற்பட்ட அரசாகட்டும், ஸ்டாலினாகட்டும், எல்சினாகட்டும், புடினாகட்டும், (தற்போதைய அதிபர்) மெட்வடேவாகட்டும், இவர்கள் அனைவரது செசன்ய கொள்கைகளும் ஒரே போன்று இருந்ததுதான்.

செசன்யா தங்களால் ஆக்கிரமைக்க பட்ட பகுதி என்பதை கண்டும் காணாமல் இருப்பதுதான் அபத்தம். எப்படி ஐரோப்பிய நாடுகள் தங்கள் காலனிகளை விட்டுக்கொடுக்க தயங்கினவோ அதைத்தான் ரஷ்யாவும் செய்கிறது. செசன்யா என்ற தன் காலனியை அது விட்டுத்தர விரும்ப இல்லை.   

அப்படி அவர்கள் விட்டு தந்திருந்தால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.எப்படி உலகம் ஹிட்லரை பார்த்ததோ, அப்படித்தான் செசன்ய மக்கள் ரஷ்ய அரசாங்கத்தை பார்க்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஐந்தில் ஒரு செசன்யர் உயிரிழந்திருக்கிறார். எண்ணற்றவர்கள் அகதிகளாய் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். ரஷ்யாவின் மீது கடுமையான வெறுப்பு உருவாகியிருக்கிறது. 

ஆக,

1. ரஷ்யா, செசன்யாவை தன்னுள் வைத்திருக்க முழு முதற்காரணம் அந்த பகுதியின் இயற்கை வளம் மற்றும் காஸ்பியன் கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ள எண்ணெய் வளம். செசன்யா சுதந்திரம் அடைந்து விட்டால் அது ரஷ்யாவிற்கு தர்ம சங்கடமான நிலையைத் தரும்.

2. இரண்டாவது, செசன்ய விடுதலை, விடுதலை கேட்கக்கூடிய மற்ற குடியரசுகளை தூண்டி விட்டதாய் அமையும்.                      

3. மூன்றாவது, இஸ்லாமிய ஆட்சி அமைந்து விடும் என்ற அச்சம். இது ரஷ்யாவை பொறுத்தவரை ஒரு ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் என்னதான் ரஷ்யாவிற்கும் செசன்னியர்களுக்கும் சில நூற்றாண்டுகளாக சண்டை நடந்து வந்தாலும், 2001 ஆம் ஆண்டுக்கு முன்வரை, அதை, ரஷ்யா மதச்சாயம் பூசி பார்த்ததில்லை.

அங்கு முஸ்லிம்கள் இல்லாமல் வேறு மதத்தினர் இருந்து, அவர்கள் ரஷ்யாவிடமிருந்து விடுதலை கேட்டிருந்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும். ரஷ்யர்களை பொறுத்தவரை அவர்கள் செசன்யர்கள், அவ்வளவுதான்.


அப்படியே அவர்களை போராளிகள் என்று சொல்லாவிட்டாலும், செசன்ய தீவிரவாதிகள் என்றுதான் அழைப்பர், இஸ்லாமிய/முஸ்லிம் தீவிரவாதிகள் என்று மதச்சாயம் பூசியதில்லை.

ஒருவேளை செசன்யா சுதந்திரம் அடைந்தால், நிச்சயம் அங்கு இஸ்லாமிய ஷரியத் படி தான் ஆட்சி அமையும். அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். காலங்காலமாக செசன்னியர்கள் விரும்பியதும், செயல்படுத்தியதும் அதைத்தான். இஸ்லாம் என்பது அவர்களின் வாழ்வில் ஒன்றிணைந்தது. இஸ்லாத்தை பிரித்து செசன்னியர்களின் வாழ்வை பார்க்கமுடியாது.

இதெல்லாம் ரஷ்யாவிற்கும் தெரியாமல் இல்லை. அவர்கள் என்ன இன்று நேற்றா இவர்களுடன் சண்டையிடுகிறார்கள்?, ரஷ்யாவிற்கு இஸ்லாமிய ஆட்சியெல்லாம் ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. அதுமட்டுமல்லாமல் ரஷ்யர்களில் முஸ்லிம்களும் அதிகம் (There are good number of Ethnic Russian Muslims). 

இப்போது இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய தீவிரவாதம் என்று அவர்கள் வார்த்தைகளை உபயோகப்படுத்துவதெல்லாம், உலக நாடுகளை செசன்ய பிரச்சனையிலிருந்து விலக்கி வைக்கத்தான். நாங்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து தான் போராடுகிறோம் என்று அறிவித்துவிட்டால் யார் செசன்யாவிற்கு ஆதரவு அளிப்பார்கள்? அதுதான் அவர்கள் இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய தீவிரவாதம் என்பது போன்ற வார்த்தைகளை போடுவதற்கு காரணம்.

இந்த தந்திரம் இப்போது நன்றாகவே வேலை செய்கிறது, 2001 ஆம் ஆண்டுக்கு முன் ரஷ்யாவை கண்டித்த நாடுகளெல்லாம் இப்போது வாய் மூடி இருக்கின்றன, ஏனென்றால் ரஷ்யா இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்தல்லவா போராடுகிறது?

உலக நாடுகள் வாய்மூடி இருந்தாலும் மனித உரிமை அமைப்புகள் ரஷ்யாவின் அத்துமீறலை கண்டித்து தான் வருகின்றன. 

சரி, ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு செசன்னியர்கள் என்ன சொல்கின்றனர்?

1. ரஷ்யா தங்கள் மீது சுமத்தும் பெரும்பாலான தீவிரவாத செயல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் பொய். அந்த குண்டுவெடிப்புகள் எல்லாம் ரஷ்ய உளவுத்துறையே நடத்தி தங்கள் மீதான போரை நியாயப்படுத்தி வருகிறது என்பது. அவர்கள் நிலையிலிருந்து பார்த்தால் இது உண்மைதான். ஏனென்றால் நிறைய குற்றச்சாட்டுகள் ரஷ்யாவினால் நிரூபிக்க படவில்லை.    

2. செசன்யா சுதந்திர நாடாகி இஸ்லாமிய ஷரியத் படி ஆட்சியமைந்தால், செசன்யாவில் மத பேதம் பார்க்காமல் அனைவரும் நிம்மதியாக வாழ வழிவகை செய்யப்படுவார்கள் என்பது இரண்டாவது.

செசன்ய மக்கட்தொகையில் கணிசமான அளவில் கிருத்துவர்களும் (8-10%), யூதர்களும் உள்ளனர்.

1944 ஆம் ஆண்டு ஸ்டாலினால் நாடு கடத்தப்பட்டபோது, இவர்களுடைய வீடுகளை பாதுகாத்து, இவர்கள் 1957 ஆம் ஆண்டு நாடு திரும்பியவுடன், இவர்களிடம் ஒப்படைத்தவர்கள் செசன்ய யூதர்கள். இன்றளவும் அந்த நிகழ்ச்சி செசன்னியர்களின் மனதில் பசுமையாக இருக்கிறது, தங்களின் அடுத்த தலைமுறைக்கும் மறக்காமல் இந்த நிகழ்ச்சியை சொல்லிக்கொடுக்கின்றனர்.

அதுபோல முதல் செசன்ய யுத்தத்தில் இவர்களுக்கு பெரிதும் உதவி புரிந்தவர்கள் செசன்ய கிருத்துவர்கள். செசன்னியர்களுடன் சேர்ந்து போரிலும் பங்கேற்றிருக்கிறார்கள். செசன்யாவில் மதக்கலவரம் ஏற்படுத்த ரஷ்ய உளவுத்துறை செய்த எந்த ஒரு முயற்சியும் பலனளிக்கவில்லை, அதற்கு காரணம் இவர்களது ஒற்றுமை.       

3. செசன்யா உருவானால், அது, ரஷ்யாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்பது இவர்களுடைய மூன்றாவது கருத்து. ரஷ்யா தங்களை பிரித்து விடுவதன் மூலம் அது தோல்வியடைந்ததாய் ஆகாது, அது ரஷ்யாவில் நிலையான அரசாங்கத்தை (Stability) உருவாக்க உதவும் என்பது செசன்னியர்களின் நிலை.   

சரி, இன்றைய சூழ்நிலைக்கு வருவோம், இனிமேலும் ரஷ்யா செசன்னியர்களுடன் போராடுவதை விரும்பவில்லை. இறைவன் நாடினாலன்றி அவர்களால் செசன்னியர்களை முழுமையாக வெற்றிக்கொள்ள முடியாது. நிலப்பகுதிகளில் வேண்டுமானால் அவர்கள் நினைத்ததை செய்யலாம், ஆனால் காகசஸ் மலைப்பகுதிகளிலோ அவர்களால் இன்று வரை வெற்றி பெறமுடியவில்லை. தற்போது அமைதி நிலவினாலும் எப்போது செசன்னியர்கள் மலைகளிலிருந்து படையோடு வருவார்கள் என்ற அச்சம் இருந்து கொண்டேதானிருக்கும் (ஏனென்றால் 1996 ஆம் ஆண்டு இப்படித்தான் நடந்தது). ரஷ்யா, இதையெல்லாம் நன்கு உணர்ந்தேயிருக்கிறது.

அதற்கு செசன்னியர்களை சமாதானப்படுத்துவது தான் ஒரே வழியென்று முயன்றுவருகிறது.

யார் தான் நினைத்திருப்பர், ரஷ்யா OIC இல் (Organisation of Islamic Conference) சேர விருப்பம் தெரிவிக்கும் என்று?   

அதுமட்டுமல்லாமல், 2020 ஆம் ஆண்டு வாக்கில், ரஷ்யாவின் மக்கட்தொகையில் 50% முஸ்லிம்கள் இருப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது. அதுபோல இன்றைய ரஷ்யாவில் வயதானவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால் செசன்யாவிலோ இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம் (Chechnya Birth rate is 26.4 per 1000 individual while in Russia it was 11.28 per individual, 2007 Report). 

ஆக ரஷ்யா தன் எதிர்காலத்தை இந்த இளைஞர்களை வைத்து தான் பார்க்கிறது.

ரஷ்யாவின் இந்த அணுகுமுறைக்கு செசன்னியர்களின் பதில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.            

நாம் மேலே பார்த்த்து போன்று, ரஷ்ய-செசன்ய பிரச்சனையின் முக்கிய சாராம்சம் இவைதான்.

என்று ரஷ்யா,செசன்யாவை முழுமையாக தன்னிடத்தில் இருந்து விலக அனுமதிக்கிறதோ அன்றுதான் இந்த பிரச்சனை முழுமையாய் முடியும்.

ஒருவேளை, ரஷ்யா எதிர்பார்ப்பதுபோல, செசன்னியர்கள் அவர்களுடன் சமாதானமாக போனாலும் அமைதி திரும்பலாம். ஆனால் செசன்னியர்கள் கடந்த காலத்தை மறப்பார்களா என்பதுதான் இப்போது ரஷ்யாவிற்கு இருக்கும் மாபெரும் சவால்....  

இறைவன் இந்த மக்களுக்கு அவர்கள் எதிர்ப்பார்க்கிற அமைதியையும், பாதுகாப்பையும் விரைவில் வழங்குவானாக...ஆமின்...

இறைவன் நம் எல்லோரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்..

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்
உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி

இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்

நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்

குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.

4. உறுதியாக இருத்தல்

பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.

அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.

உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.

தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்

குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.

அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்

தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.

8. மன்னித்து விடுங்கள்

குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.

9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்

நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.

10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்

சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.

இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.

அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.

இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்

உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.

இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

12. கீழ்ப்படிதல்

பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!

தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!

முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.

இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.

மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

நன்றி : தமிழ் இஸ்லாம் 
 

50 Questions And Answers On Islamic Monotheism

50 Questions And Answers On Islamic 
Monotheism 
Q1 Who is your Rubb? (the Lord,the Creator etc).
A. My Rubb is Allah Who has created me and all that exists. He nourishes me 
and all creatures by His Bounties.
Q.2. What is your religion?
A. My religion is Islam, which is submission and obedience to the Order oF Allah 
and His Messenger with love, hope and fear.
Q.3. How did you know Allah?
I know Him by His signs and creation like the day and night; the sun and the 
moon; the heaven and the earth, and all that is there in and between them.
Q.4. Where is Allah?
A. Allah is above the heavens raised over the Throne and separated from His 
creatures.
Q.5. Is Allah with us (in person)?
A. Allah is settled over His Mighty Throne, but He is with us by His Knowledge, 
hearing ,seeing and other attributes. As He said: "Fear not verily! I am with you 
both hearing and seeing (V,20. :46)
Q.6. Who are the friends of Allah?
A. Those people are the friends of Allah who are pious and righteous, fear Him 
much abstain from all kinds of sins and perform all kinds of goods, and holdfast 
to the Qur`an and Sunnah.
Q. 7. How do you worship Allah?
A. I worship Allah in a manner in which all my ibadah is dedicated to Him Alone. I 
do not ascribe anyone with Him in worship.
Q-8. Why did Allah send Messengers?A. Allah has sent Messengers so that they call the people to worship Him Alone, 
not ascribing any partner with Him, and in order that mankind should have no 
plea against Allah.
Q-9 What is the meaning of Islam ?
A. Islam means i.e. submission to Allah with Tawhid .
Q-10 What are the pillars of Istam?
A.        1. Testimony of Faith (There is no true God except Allah and Muhammad 
is                   the Messenger of Allah )
2. To establish Salat (prayers).
3. To pay Zakat.
4. To observe Saum (fasting) in Ramadan.
5. Hajj (pilgrimage to the Sacred House) if one can afford the journey.
Q-11 What is Iman?
A. Iman (Faith) means to believe in the heart, to confess by the tongue and to act 
with the parts of the body.
Q-12 Can there be any variation in Iman?
A. By some words and deeds it may increase and by some words and deeds it 
may decrease.
Q-13 What do you mean by increase and decrease in Iman?
A- Iman (Faith) increases by obedience to Allah and good deeds while it 
decreases by sins and evil acts.
Q-14 What are the pillars of Iman (Faith)
A. The pillars of Iman are six i.e. to believe in:
1. Allah.
2. His Angels.
3. His Messengers.4. His Books.
5. The Last Day.
6. Divine Preordainments good or bad.
Q-15 What is Belief in Allah?
A. The Belief in Allahi is that you should believe that Allah is the Sole Creator 
Sustainer Provider and the One in Whose Hand is the disposal of all affairs. 
Everything stands in need of Him, but He stands in need of none. He is the Only 
One Who is worthy of being worshipped. He has the Best Names and Perfect 
Attributes.
0-16 Who are the angels?
A. The angels are creatures of light. They are Allah's obedient slaves, they do 
that which they are commanded and are incapable of disobedience.
Q-17 What do you mean by Belief in the Book and the Messengers?
A. It means that Allah sent the Messengers like Moses, Jesus,Abraham. Noah 
etc. and sent down the books like the Torah, Injeel, Zaboor (Psalms) etc. to call 
the people to worship Allah Alone, associating nothing with Him. He sealed 
(finalized) the Messengers with Prophet Muhammed  and abrogated all 
previous books with the Qur'an. Therefore the worship should be done according 
to the Qur'an and the Sunnah of the Prophet .
Q-I8  What is meant by Belief in the Last Day?
A. The Belief in the Last Day means to believe that Allah has ordained a fixed 
term for everything, and a term for this world. He will assuredly raise the dead 
from their graves and will account for everyone their deeds in this world. On that 
Day of Resurrection, rewards and punishments will be assigned. Every one will 
be justly rewarded or punished.
Q-19 What is meant by Belief Preordainment (Qadar)?
A. The Belief in Preordainment (Qadar) means to believe that everything — good 
or bad — happens or takes place according to what Allah has ordained for it. He 
has created everything in due proportion.
Q-20 What is the cleaning of "There is no God but Allah"?A. It means there is no true deity except Allah Alone, Negating all false gods and 
affirming that Allah is the only true God.
Q-21 What is the meaning of ^Muhammad is the Messenger of Allah"?
A. It means total submission to him in whatever he ordered, and avoiding what 
he forbade and believing in all those matters he informed us about.
Q-22 What are the conditions of the testimony of Faith?
A. There are seven conditions of the testimony of Faith:
       1- Knowledge whick negates ignorance.
       2- Certainty which negates doubt.
       3- Sincerity and purity of intent which negates Shirk.
       4- Truthfulness which negates  hypocrisy.
       5- Love and devotion which negates disdain of Allah`s religion.
       6- Submission which negates disobedince.
       7- Acceptance which negates rejection or denial.
Q-23 What is the greatest thing that Allah has enjoined?
A. The greatest thing Allah has enjoined is Tauhid (Monotheism).
Q-24 What is Tauhid (Islamic Monotheism)?
A. Tauhid means declaring Allah to be the only God who deserves to be 
worshipped in truth and confirming all attributes with which He has qualified 
Himself or that are attributed to Him by His Messenger  .
Q-25 What are the aspects of Tauhid?
A. There are three aspects of Tauhid:
       1- Tauhid-ar-Rububiyah.
       2- Tauhid-al-Uluhiyah.
       3-Tauhid-al-Asma was-Sifat.Q- 26 What isTauhid-ar-Rububiyah?
A. It is declaring Allah to be One and Unique in His work, Iike creation, 
sustenance, bringing to life and causing death etc.
Q-27 What is Tauhid-al-Uluhiyah?
A. It is declaring Allah as the Only God to whom all acts worship must be 
dedicated such salat (prayers), Zakat, Sawm(fasting), supplications vowing etc.
Q-28 What isTauhid-al-Asma was-Sifat?
A. It is an affirmation of all the Divien Names and Attributes of Allah in a manner 
that
suits His Majesty, as mentioned in the Qur'an and the Sunnah.
Q-29 How would you describe Ibadah?
A. It is a comprehensive word comprising deeds and words that Allah loves and 
is pleased with whether manifested or hidden,
Q-30 What are the conditions of Ibadah?
A. There are two conditions of Ibadah:
1. Sincerity to Allah.
2. Submission to Allah's Messenger  i.e. to act according to his Sunnah.
Q-31 Write some types of Ibadah.
A. Some types of Ibadah are the prayers, the obligatory charity,
fasting, the pilgrimage, fear of Allah, hope in His Mercy, Seeking His aid. and 
other acts of worship which Allah has commanded and enjoined.
Q-32 What is the greatest thing Allah has forbidden?
A. The greatest thing Allah has forbidden is Shirk (polytheism).
Q-33 What is polytheism?
A. It means to believe that there is one who shares Allah in His acts i.e. ascribing 
partners or setting up rivals to Allah in His rights.Q-34 What are the types of polytheism?
A. There are three types of polytheism:
1. The greater polytheism (Shirk Akbar).
2. The lesser polytheism (Shirk Asghar).
3. The inconspicuous polytheism (Shirk Khafi).
Q-35 What is greater polytheism?
A. The greater polytheism is to devote any form of worship to other than Allah 
Allah will never forgive one who dies upon Shirk,nor accept his good deeds, and 
he would be cast out from the folds of Islam.
Q-36 What are the types of greater polytheism?
A. There are four types of greater polytheism:
1- The polytheism in invocation i.e. involving supplications to other than Allah.
2. The polytheism in intentions i.e. purpose and intentions not for the sake of 
Allah but directed towards other deities.
3, The polytheism in obedience i.e. rendering obedience to any authority against 
the Order of Allah.
4. The potytheism in love i.e showing love to others which is due to Allah Alone.
Q-37 What is lesser polytheism?
A. The lesser polytheism is Ar-Riya, that means the acts of worship done to gain 
praise or fame rather than to please Allah, this type of polytheism, however, does 
not cast the person committing it out of the fold of Islam.
Q-38 What is inconspicuous polytheism?
A. The inconspicuous polytheism implies being dissatisfied with the conditions 
ordained by Allah.
Q-39 What is the proof of the inconspicuous polytheism?
A.The proof of the above Shirk is the saying of the Prophet  "The 
inconspicuous polytheism is more hidden among this nation than the track of a 
black ant over a black stone on a dark night" (Musnad Ahmad)Q-40 What are the types of Kufr (disbelief)?
A. There are two types of Kufr :
1. The majorKufr which cast its people out of Islam,
2. The lessor cr minor Kufr which does not cast the one who commits it out of 
Islam. It is Kufr of ungratefulness.
Q-41 What are the types of major Kufr?
A. There are five types of major Kufr :
1. The Kufr of denial.
2. The Kufr of arrogance associated with recognition of the truth.
3. The Kufr of doubt.
                    4-. The Kufr of disregard,
5. The Kufr of hypocrisy.
Q-42 What are the categories of hypocrisy ?
A. There are two categories of hypocrisy:
1. Hypocrisy in Belief.
2. Hypocrisy in deeds and actions.
Q-43 What is the hypocrisy in Belief?
A. Hypocrisy in Belief is of six types:
1. Denial of the Messenger  .
2. Denial of the thing with which the Messenger is sent.
3. Hating the Messenger 
4.Hating the thing with which the Messenger is sent.
5. Rejoicing at the disgrace of Islam.6. Disliking the prevalence of Islam.
Q-44 What is the hypocrisy in deeds and actions?
A. The hypocrisy in deeds and actions is of five types:
1- When he speaks, he lies.
2- When he promises., he breaks it.
3. When he is entrusted, he betrays.
4. When he disputes, he acts immorally.
5. When he makes a pact, he makes acts treacherously.
Q-45 Are good deeds accepted (by Allah) with the polytheism?
A. Never! None of the deeds are accepted when mixed with polytheism.
Allah says: " If they had joined in worship others with Allah all that they used to 
do would have been of no benefit to them" (V.6: 88)
"Verily! Allah forgives not setting up partners in worship with Him, but He forgives 
whom He pleases sins other than that" '(V.4:116)
Q-46 What are the nullifiers of Islam?
A. The nullifiers of Islam are ten:
1. Polytheism of worship.
2. He who does not believe that the polytheists are disbelievers, or doubts their 
infidelity or holds their belief to be valid.
3. He who sets up intermediaries between one's self and Allah, supplicating 
them, trusting them and asking them to intercede on his behalf.
4. He who believes that the guidance of others is more perfect than the Prophet
.
5. He who hates anything that the Prophet  was sent with.
6. He who denies the religion of the Prophet  or ridicules its reward or 
punishment.7. Sorcery.
8. Supporting the polytheists against the Muslims.
9. He who believes that some people are exempted from abiding by the Shari`ah 
as Khidr  was exempted by the laws of Musa.
10. Turning away from the religion of Allah by neither learning nor applying it.
Q- 47 What are the three fundamentals that every Muslim must learn?
A. The three fundamentals are:
I, Knowing Your Rubb (the Lord, the Creator, the Sustainer, and the One in 
Whose Hand is the disposal of all affairs).
2. Knowing your religion (Islam).
3. Knowing your Prophet Muhammad
Q-48 What is Taghut?
A. Everything that is worshipped. or followed or obeyed other than Allah is 
Taghut.
Q-49 How many Taghut are there and who are their leaders?
A. They are many but their leaders are Five:
Q. 50-Who are the leaders of Taghut ?
A. They are:
1. Satan, may Allah curse him,
2. Anyone who is worshipped with his consent.
3. A person who calls the people to be worshipped instead of Allah.
4. A person who claims the knowledge of Ghaib (unseen, hidden, invisible, 
absent etc).
5.The ruler who rules by laws other than the law sent down by Allah.