Tuesday, February 1, 2011

கல்கி


இந்துக்களின் வேதங்களில் மிக பிரபலமாக அறியப்படும் "கல்கி அவதாரம்" குறித்து -அவர் பூமியில் குழப்பங்களும்,கொடுமைகளும் மலிந்து காணப்படும் பொழுது தர்மத்தை நிலைநாட்ட அவதரிப்பார் எனவும் நம்பபடுகிறது.இனி அவர் பூமியில் பிறக்க போவதில்லை.,ஆம்! அவர் ஏற்கனவே பிறந்து விட்டார் ... யார் அவர் ?
ஓர் ஆய்வு பார்வை


ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும்கடைசி அவதாரமான கல்கிஇறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லைசமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின்,இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால்அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடுஅந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால்கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுபிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம்,வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியதுதலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும்ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷபன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தைஇதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும்முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்துபலமான ஆதாரங்களினால்,இப்புத்தகத்தின் தகவல்முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள்குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம்மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால்ஹிந்துக்கள்இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல்ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு,இவ்வுலகில் உதித்துஇறைத்தூதை எத்தி வைத்துவாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்கபண்டிட்தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள்கல்கி அவதாரம் தான்பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இதுகடைசி தூதர்முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படிகல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில்கல்கி அவதாரத்தின் தந்தையைவிஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால்இறைவன்அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடுபகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆகவிஷ்னு பகத் என்பதுஅல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில்அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்குசாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆகஇறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பதுஉறுதிப்படுகிறது.

4.அதோடுகல்கி அவதாரம்ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும்வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆகஇது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும்மிக உயரியமதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால்முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்குஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆகமக்காவிலேயே,அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும்கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும்அதன் மூலம் அவர்இவ்வுலகத்தையும்ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிஃராஜ்’ இரவில்புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது,இதைத்தானே சொல்கிறது?

8.அதோடுகல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும்இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்குபத்ரு போர்க்களத்தில்இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவதுகல்கி அவதாரம்குதிரையேற்றத்திலும்அம்பெய்துவதிலும்,வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில்பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பதுஅதி முக்கியமான,கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவதுகுதிரைவாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது,தற்போதுநவீன ஆயுதங்களானதுப்பாக்கிகள்பீரங்கிகள்ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால்வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில்,வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பதுபுனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

தமிழ் மொழி பெயர்ப்பு: சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)

நன்றி :www.islamiyadawa.com